search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்கள் அழகு"

    • தங்க நகைகள் மீது பெண்களுக்கு தனி ஈடுபாடு உண்டு
    • ஆண்களுக்கான இந்திய கலாச்சாரத்தில் நகைகள் முக்கியத்துவத்தை பெற்றுள்ளன.

    தங்க நகைகள் மீது பெண்களுக்கு தனி ஈடுபாடு உண்டு; அவர்களின் ஆபரணங்கள் குறிப்பிடத்தக்கவை. இருப்பினும், ஆண்களின் நகைகளும், அதன் வகைகளில் சொந்த அழகைக் கொண்டுள்ளது. நகைகளைப் பற்றி பேசும்போது ஒருவர் பெரும்பாலும் ஆண்களைப் பற்றி நினைப்பதில்லை, ஆனால் நகை மரபுகள் பெண்களைப் போலவே ஆண்களிடமும் உள்ளன. ஆண்களுக்கான இந்திய கலாச்சாரத்தில் நகைகள் முக்கியத்துவத்தை பெற்றுள்ளன. கழுத்தணிகள், மோதிரங்கள் மற்றும் வளையல்கள் முதல், ஆண் நகை மரபுகள் அலங்காரம் மட்டுமல்ல, வலிமை , கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் சின்னங்கள்.

    இந்திய நகைகள் அலங்காரமானது மட்டுமல்ல, தாயத்து பண்புகளையும் கொண்டுள்ளது. ஆயுர்வேத மற்றும் இந்து ஜோதிட மரபுகளில் ஆரோக்கியம் மற்றும் ஜோதிட பலன்களை வழங்குவதாக நம்பப்படுகிறது, மக்கள் துளையிடுதல் (காது மற்றும் மூக்கு குத்துதல்)மற்றும் பிற நகைகளைப் பயன்படுத்தி அக்குபிரஷர் புள்ளிகளைத் தூண்டுகிறார்கள்.

    நகைகள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான உலோகம் தங்கம். இது நீடித்தது மற்றும் அன்றாட பயன்பாட்டிற்குப் பிறகும் கெடுக்காது. இந்து மத நம்பிக்கை கொண்ட பல இந்தியர்களுக்கு, தங்கம் விலைமதிப்பற்றதாக கருதப்படுகிறது. தங்கம் தொட்டால் எதையும் சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது என்று நம்பப்படுகிறது. இது சக்தி மற்றும் செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இது நல்ல ஆரோக்கியத்தையும் செழிப்பையும் குறிக்கிறது.

    ஆண்களுக்கான பல வகையான இந்திய நகைகளின் வடிவம் மற்றும் செயல்பாடு முதன்மையாக பாதுகாப்பிற்காக உள்ளது. எடுத்துக்காட்டாக, ஆண்களுக்கான பதக்கங்கள் தீய சக்திகளின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளுக்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய முதன்மை தேவையிலிருந்து எழுந்தன. பெரும்பாலும் ஒரு நெக்லஸ் அல்லது வளையலில் அணியும், பதக்கங்கள் ஆபத்தைத் திசைதிருப்பும் சக்தியைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது, தீமையிலிருந்து பாதுகாக்கிறது, மேலும் நல்லதை ஈர்க்கும் சக்தியையும் கொண்டுள்ளது.

    பிரிட்டிஷ் தொழிலதிபர் சர் தாமஸ் வார்டில் 1901 இல் கருத்துத் தெரிவிக்கையில், ஆண்களுக்கான வெள்ளியில் ப்ரோச்ஸ் மற்றும் வளையல்களை தயாரிப்பதில் இந்தியாவில் உள்ள திறமை வியக்கத்தக்கது என்றார்.

    மிகவும் பிரபலமான ஆண்கள் நகை வடிவமைப்புகள்கழுத்தணிகள் மற்றும் சங்கிலி

    ராயல் அல்லது பணக்கார இந்திய ஆண்கள் பொதுவாக பெண்களின் கனமான குந்தன் நகைகளுக்கு மாறாக மாலைகள் எனப்படும் வைரம், மரகதம் மற்றும் முத்துக்களின் சரங்களை அணிவார்கள். அனைத்து இந்திய சமூகங்களின் ஆண்களும் பொதுவாக ஹான்ஸ்லி, காலர் போன்ற நெக்லஸ் அல்லது மெல்லிய தங்கச் சங்கிலிகளை அணிவதைக் காணலாம். ஹன்ஸ்லி என்ற பெயர் கிளாவிக்கிளில் இருந்து பெறப்பட்டது, அங்குதான் இந்த ஆபரணம் உள்ளது. மேற்கத்திய இந்திய கலாச்சாரத்தில், கியூபா இணைப்பு பாணி வடிவமைப்பு போன்ற எளிய தங்க சங்கிலிகளால் ஆண்கள் தங்களை அலங்கரிப்பது மிகவும் பொதுவானது.

    கட வளையல்கள்

    பிரபலமான மற்றும் நன்கு அறியப்பட்ட கடா என்பது அனைத்து மதங்களைச் சேர்ந்த இந்திய ஆண்களால் பொதுவாக அணியும் வளையலாகும். கடஸ் என்பது தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட வளையல் வடிவமாகும். கடா வளையல்களின் உட்புறம் சில நேரங்களில் வண்ணமயமான பற்சிப்பி, பின்னிப் பிணைந்த யானை தும்பிக்கைகள், மயில்கள் அல்லது முதலைகளின் மலர் வடிவமைப்புகளால் மூடப்பட்டிருக்கும். கடா வளையல்கள் வெள்ளி அல்லது தங்கத்தால் எனாமல் செய்யப்பட்ட உட்புறத் தகடு, விலங்கு மற்றும் மலர் வடிவங்களைக் கொண்டவை.

    பிண்டி மோதிரங்கள்

    இந்திய ஆண்களுக்கான மற்றொரு பிரபலமான ஆபரணங்களில் பிண்டி (அல்லது, பெட்டி) மோதிரம் அடங்கும். ஆண்களுக்கான இந்த பாரம்பரிய மோதிரங்கள் பெரும்பாலும் அணிந்தவரின் ஜோதிட முறைக்கு ஏற்ப ரத்தினக் கற்களால் அமைக்கப்படுகின்றன அல்லது மத தெய்வங்களின் சித்தரிப்புகளுடன் பொறிக்கப்பட்டுள்ளன. விரல்களின் மென்மையான பகுதி ஒரு அக்குபிரஷர் புள்ளி மற்றும் ஒரு மனிதனின் உடல் மற்றும் ஆன்மீக ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது.

    ஆண்களுக்கான இந்திய நகைகள் நீண்ட காலத்திற்கு முந்தையவை மற்றும் அவற்றின் கலாச்சார முக்கியத்துவத்திற்காக இன்னும் மதிக்கப்படுவதால், இந்திய ஆண்களின் பல நூற்றாண்டுகள் பழமையான நகை மரபுகளை மறைக்க முடியாது. இந்த ஆபரணங்கள் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்துள்ளன - அலங்காரத்திற்காக மட்டுமல்ல, ஆரோக்கிய நலன்களுக்காகவும், ஒரு மனிதனின் சமூக மற்றும் அரசு குறிகாட்டியாகவும், அவனது சமூகம், மதம் மற்றும் சுயம் ஆகியவற்றுடனான உறவு தங்க நகைகளுக்கு உள்ளது

    இன்று, ஆண்கள் செயின்கள்,மோதிரங்கள், பிரேஸ்லெட்கள், காதணிகள் போன்ற நகைகளை அணிவது பெரும்பாலும் சிறப்பு சந்தர்ப்பங்கள் மற்றும் திருவிழாக்களில் மட்டுமல்லாமல் தினசரி நகைகளாகவும் மாறி இருக்கிறது.

    • இன்றும் நாம் அணிகிற பெரும்பாலான ஆடைகள், மேற்கத்திய பாணிகளை பின்பற்றி தயாரிக்கப்படுபவை.
    • சமீப காலத்தில் பெண்களுக்கான சில ரக ஆடைகளில் பாக்கெட்டுகள் வைத்து தைக்கப்படுகின்றன.

    ஆண்களின் உடைகள், பைகள் இல்லாமல் முழுமை அடைவதில்லை. ஆனால், பெண்களின் உடைகளில் பைகள் வைத்து தைப்பதை பற்றி ஏன் யோசிப்பதில்லை?

    பெண்கள் காலம்காலமாக தோள்களிலும் கைகளிலும் பைகளை சுமந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் தோள் பைகள் ஒருபோதும் சட்டை பைகளுக்கு இணையாகாது. இன்றும் நாம் அணிகிற பெரும்பாலான ஆடைகள், மேற்கத்திய பாணிகளை பின்பற்றி தயாரிக்கப்படுபவை. எனவே இந்தக் கேள்விக்கான விடையையும் ஐரோப்பிய வரலாற்றில் இருந்தே கண்டறிய முடியும். முந்தைய காலத்தில் ஆண்களும், பெண்களும் கையில் எடுத்துச் செல்லும் பைகளை மட்டுமே பயன்படுத்தினார்கள்.

    கி.பி.476 முதல் 1500-ம் ஆண்டு வரையிலான காலத்தில் எடை குறைவான பொருட்களை வைக்கும் வகையில் சட்டைப்பைகளையும் இடுப்பு பெல்ட்டுடன் இணைக்கப்பட்ட சிறு பைகளையும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். திருடர்களிடமிருந்து பணத்தை பாதுகாப்பதற்காக, சட்டையின் உட்புறமாக பைகளை தைக்கும் வழக்கமும் தொடங்கியது. பெண்களும்கூட சில ரக ஆடைகளில் இப்படி உள்பைகளைத் தைத்துக்கொண்டார்கள்.

    17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் ஆண்களின் கோட், வெயிஸ்ட் கோட், பேன்ட் என்று எதுவாக இருந்தாலும் அதில் கண்டிப்பாகப் பைகள் இருந்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் பெண்களின் ஆடைகளுக்கு இந்த வாய்ப்பு அமையவில்லை. 18-ம் நூற்றாண்டில் நடந்த பிரெஞ்சு புரட்சியின்போது ஆடை வடிவமைப்பிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. பெண்களின் ஆடைகள் கொஞ்சம் கொஞ்சமாக உடலை இறுக்கிப் பிடிக்க ஆரம்பித்தன. எனவே பெண்கள் தங்களது உடைகளுடன் பைகளை இணைத்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாமலே போனது.

    இந்த காலகட்டத்தில் மிகவும் அழகிய வடிவமைப்புகளோடு கூடிய பெண்களுக்கான பிரத்யேக பர்ஸ் பிரபலமானது. ஆனால், சமீப காலத்தில் பெண்களுக்கான சில ரக ஆடைகளில் பாக்கெட்டுகள் வைத்து தைக்கப்படுகின்றன.

    • வெள்ளை மற்றும் நீலப் பின்னணி கொண்ட சட்டைகள் அதிக பிரபலமானதாக உள்ளது.
    • ராயல் லுக் தரும் கிளன் பிளைட் பேட்டர்ன் அதிகளவில் விரும்பி அணியப்படுகிறது.

    ஆண்கள் அணிகின்ற சட்டையில் இடம் பெறும் பேட்டர்ன்கள் என்பது தனிசிறப்பு கொண்டவை. அதில் ஒவ்வொரு பேட்டர்ன்களும் ஒவ்வொரு விதமாக உருவாக்கப்பட்டிருக்கும். இந்த பேட்டர்ன்கள் என்பது பிரபலமானதாக மாறிவிட்ட பிறகு அதற்கென தனித்துவம் ஏற்பட்டு விடுகிறது. உலகமெங்கும் சட்டை உற்பத்தியாளர்கள் இந்த பேட்டர்ன்களில் ஏதேனும் ஒன்றை கொண்டே சட்டையை உருவாக்கி தருகின்றனர். அதுபோல் மிக முக்கியமான சட்டை பேட்டர்ன்களை அடிப்படையாக கொண்டே விதவிதமான வண்ணக் கலவையுடன் சட்டைகள் உலா வருகின்றன.

    பிரபலமான சட்டை பேட்டர்ன்கள்

    உலகெங்கும் பிரபலமான சட்டை பேட்டர்ன்கள் என்றவாறு பல உள்ளன. அவை ஜின்கெம், மெட்ராஸ், டார்டன் பிளைட், ஷெப்பர்ட செக், ஹவுண்ட்ஸ் டூத், கிளன் பிளைட், விண்டோ பேன் செக், கிராப் செக், டாட்டர்ஸ் சால், மினி செக், பின் செக், அவனிங் ஸ்டிரிப், பெங்கால் ஸ்டிரிப்ஸ், கேண்டி ஸ்டிரிப்ஸ், பென்சில் ஸ்டிரிப், ஹேர்லைன் ஸ்டிரிப், பார்கோடு, ஷேடோ போன்றவாறு பல பேட்டர்ன்கள் உள்ளன.

    ஜின்கெம் பேட்டர்ன்

    ஜின்கெம் என்பது பொதுவாக கட்டம் உள்ளவாறு உருவாக்கப்படுகிறது. வெள்ளை மற்றும் வண்ணம் இணைந்தவாறு பெரும்பாலும் சதுர கட்டங்கள் பெரிய அளவில் உள்ளவாறு இதன் வடிவம் இருக்கும். நீளம் மற்றும் குறுக்குவாட்டில் பட்டை கோடுகள் என்பது இரட்டை வண்ணத்தில் பிரிண்ட் செய்யப்படும்போது சதுரமான கட்டம் போன்று காட்சியளிக்கும். நீளவாக்கில் 17-ம் நூற்றாண்டில் அறிமுகமான ஜின்கெம் பேட்டர்ன் என்பது 18-ம் நுற்றாண்டில் கட்டம் வடிவத்தில் உருவாக்கப்பட்டன. வெள்ளை மற்றும் நீலப் பின்னணி கொண்ட இந்த பேட்டர்ன் சட்டைகள் அதிக பிரபலமானதாக உள்ளது.

    மெட்ராஸ் பேட்டர்ன்

    கோடை காலத்தில் அணிய ஏற்றவாறு இந்தியாவில் கிழக்கிந்திய நிறுவனத்தினர் உருவாக்கிய பேட்டர்ன் தான் மெட்ராஸ். வண்ணமயமான கோடுகள் மற்றும் கட்டங்கள் உள்ளவாறு ஒரே சீரான இல்லாத மாறுபட்ட அளவுகளில் காணப்படும். மெட்ராஸ் பேட்டர்ன் கேஷ்வல் சட்டைகளாகவும், அரைகால் சட்டைகளாகவும் அதிக அளவில் உருவாக்கப்படுகின்றன.

    கிளன் பிளைட்

    கிளன் பிளைட் என்பது வேல்ஸ் ராஜா கட்டம் என்றவாறு அழைக்கப்படுகிறது. இந்த பேட்டர்ன் பெரும்பாலும் சூட் வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இரட்டை சாயல் கொண்ட வெட்டுப்பட்ட கட்டங்கள் கொண்டவாறு இருக்கும். அதுபோல் டார்க் மற்றும் லைட் வண்ண கோடுகள் மாற்றி மாற்றி உள்ளது போன்ற பேட்டர்ன் அமைப்பு. ராயல் லுக் தரும் இந்த பேட்டர்ன் அதிகளவில் விரும்பி அணியப்படுகிறது.

    அவனிங் ஸ்டிரிப்ஸ்

    அவனிங் ஸ்டிரிப்ஸ் என்பது அகலமான வடிவில் நீள கோடுகள் உள்ளது போன்று இருப்பது. வெள்ளை பின்னணியில் டார்க் மற்றும் லைட் வண்ண பட்டை கோடுகள் வருவது இதன் சிறப்பு அதாவது ¼ இன்ச் அளவிற்கு இந்த பட்டை கோடு உள்ளவாறு சீரான இடைவெளி அமைப்புடன் இந்த அவனிங் ஸ்டிரிப்ஸ் பேட்டர்ன் உள்ளது. இந்த அவனிங் ஸ்டிரிப்ஸ் என்பது கேஸ்வல் ஆடை வடிவமைப்பில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

    பென்சில் ஸ்டிரிப்ஸ்

    பென்சில் அளவுள்ள சிறிய கோடுகள் உள்ள அமைப்பு. சீரான இடைவெளியின்றி வரிசைகிரமமாக கோடுகள் நீளவாக்கில் இருப்பது இதன் அமைப்பு. இதுவும் வெள்ளை நிற பின்னணியில் வண்ண கோடுகள் நீளவாக்கில் வரும்.

    ஷேடோ ஸ்டிரிப்ஸ்

    ஷேடோ ஸ்டிரிப்ஸ் என்பது நீளவாக்கில் கோடுகள் போல அமைந்திருக்கும். ஒரு வண்ணத்திற்கு மற்றது மார்டன் போல காட்சியளிக்கும். மேலும் ஏதேனும் வண்ணக்கோடுக்கு ஏற்ப அதே வண்ண சாயல் பரவியுள்ளவாறு தோன்ற செய்யப்படும். பெரும்பாலும் மூன்று (அ) இரட்டை வண்ண சாயல் பின்னணியில் இந்த பேட்டர்ன் உருவாக்கம் அமைகிறது.

    ஹியரிங் போன்

    மேல் மற்றும் கீழ் நோக்கி 'க்ஷி' வடிவில் இந்த பேட்டர்ன் வடிவமைக்கப்பட்டிருக்கும். மீனின் உள்முள் வடிவில் உள்ள இந்த பேட்டர்ன் சூட் மற்றும் வெளிநிகழ்வு ஆடைகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நாம் அணிகின்ற சட்டைகள் எந்த வகையான பேட்டர்ன் என்பதை அறிந்து அணியும்போது அதன் சிறப்பும் பெருமையும் அறிய முடியும்.

    • ஆண்கள் முகத்திற்கு ஷேவிங் செய்யும்போது தவறாமல் கிரீம் பயன்படுத்த வேண்டும்.
    • ஆண்கள் பெண்களை போல் முறையான சரும பராமரிப்பு வழிமுறைகளை கையாள்வதில்லை.

    பெண்களுக்கு இணையாக ஆண்கள் பலரும் சரும அழகை பராமரிக்கும் விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் பெண்களை போல் முறையான பராமரிப்பு வழிமுறைகளை கையாள்வதில்லை. ஒருசில விஷயங்களை தவறாமல் கடைப்பிடித்து வந்தாலே சரும அழகை மெருகேற்றிக்கொள்ளலாம். முதுமை எட்டிப்பார்ப்பதையும் தள்ளிப்போட்டுவிடலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    * பொதுவாகவே ஆண்கள் எந்தவொரு கிரீமையும் சருமத்தில் தடவுவதற்கு விரும்பமாட்டார்கள். இதனால் சருமம் எளிதில் வறட்சி அடைந்துவிடும். மென்மை தன்மை நீங்கி கடினமானதாகவும் மாறிவிடும். மென்மை அழகை பேணுவதற்கு மாய்ஸ்சுரைசரை தினமும் தடவி வரலாம். இது சரும வறட்சியை போக்கக்கூடியது. சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்டது.

    * சன்ஸ்கிரின் கிரீம்களை பெண்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. ஆண்களும் பயன்படுத்தலாம். அது சூரிய கதிர்வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கக்கூடியது என்பதால் இருபாலரும் தாராளமாக உபயோகிக்கலாம். சன்ஸ்கிரினையும் முறையாக உபயோகிக்க வேண்டும். வெளியே புறப்பட்டு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு சருமத்தில் தடவிக்கொள்வது நல்லது.

    * சன்ஸ்கிரின் போலவே முதுமை தோற்றத்தை தள்ளிப்போடும் 'ஆன்டி ஏஜிங் கிரீம்'களை ஆண்களும் அவசியம் பயன்படுத்த வேண்டும். வைட்டமின் ஏ, சி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட கிரீம்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் விரைவாகவே முதுமை தோற்றத்தை எதிர்கொள்வதை தடுத்துவிடலாம்.

    * ஆண்கள் முகத்திற்கு ஷேவிங் செய்யும்போது தவறாமல் கிரீம் பயன்படுத்த வேண்டும். அது சருமத்திற்கு இதமளிக்கும். ஈரப்பதத்தையும் தக்கவைத்துக்கொள்ளும். சிலரோ கிரீம் பயன்படுத்தாமல் ஷேவிங் செய்வார்கள். அது சரும வறட்சிக்கு வழிவகுத்துவிடும். அதனால் சருமம் பாதிப்புக்குள்ளாகும். வெட்டு காயங்களை எதிர்கொள்ளவும் நேரிடும். அதனை தவிர்க்க ஷேவிங் கிரீமை தவறாமல் பயன்படுத்த வேண்டும். ஷேவிங் செய்த பிறகு லோஷனையும் தவறாமல் தடவ வேண்டும்.

    * ஆண்களில் பலர் குளிக்கும்போது உடலுக்கு பயன்படுத்தும் சோப்பை முகத்திற்கும் உபயோகிப்பார்கள். அப்படி சோப்பை பயன்படுத்துவது சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கையான எண்ணெய் தன்மையை நீக்கிவிடக்கூடும். அதனால் சருமம் வறட்சியடையும். சரும செல்களும் பாதிப்பை எதிர்கொள்ளும். அதனை தவிர்க்க சோப்புக்கு பதிலாக 'பேஸ் வாஷ்' பயன்படுத்துவது சிறந்தது.

    * பெண்களின் சருமத்தில் மட்டுமே அழுக்குகள், இறந்த செல்கள் படிவதில்லை. ஆண்களின் சருமத்திலும் இத்தகைய பாதிப்புகள் நேரும். அதனால் ஆண்களும் அவ்வப்போது 'ஸ்கரப்' செய்ய வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கி முகம் புதுப்பொலிவோடு காட்சியளிக்கும். பால்-பாதாம், தயிர்-லவங்கப்பட்டை, தேங்காய் எண்ணெய்-புரவுன் சுகர், ஓட்ஸ்-கற்றாழை ஜெல் போன்ற பொருட்களை பயன்படுத்தி எளிதாக 'ஸ்கிரப்' செய்யலாம்.

    ×